புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் இந்தியாவே முதலிடம் – உலகளவில் கொரோனா நிலவரம்

 

புதிய  நோயாளிகள் அதிகரிப்பதில் இந்தியாவே முதலிடம் – உலகளவில் கொரோனா நிலவரம்

நாடு முழுக்க அறிவிக்கப்பட்டிருந்த லாக்டெளனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட இயல்புநிலைக்கு திரும்பிவிட்டதைபோல தளர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உலகளவில் பார்க்கும்போது புதிய நோயாளிகள் அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து இந்தியாவே முதல் இடத்தில் இருக்கிறது.

செப்டம்பர் 01-ம் தேதி காலை நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.  

புதிய  நோயாளிகள் அதிகரிப்பதில் இந்தியாவே முதலிடம் – உலகளவில் கொரோனா நிலவரம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 56 லட்சத்து  14 ஆயிரத்து 665 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 19 நாட்களுக்குள் 48 லட்சம் அதிகரித்து விட்டது.  

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 79 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 54 ஆயிரத்து 029 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

புதிய  நோயாளிகள் அதிகரிப்பதில் இந்தியாவே முதலிடம் – உலகளவில் கொரோனா நிலவரம்

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 99 சதவிதத்தினர்  லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 62,07,040 பேரும், பிரேசில் நாட்டில்  39,10,901 பேரும் இந்தியாவில் 36,87,939 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.  

இது இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.

புதிய  நோயாளிகள் அதிகரிப்பதில் இந்தியாவே முதலிடம் – உலகளவில் கொரோனா நிலவரம்

நேற்று மட்டும் 68,770 பேர் புதிய நோயாளிகளாக இந்தியாவிலும், பிரேசிலில் 48,590 பேரும், அமெரிக்காவில் 37,816 பேரும் அதிகரித்திருக்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக கொலம்பியா, பெரு, மெக்சிகோ, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.