மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு : முழு விவரம் இதோ!

 

மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு : முழு விவரம் இதோ!

இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

உலகையே உலுக்கி எடுத்த கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் இந்தியா முழுமையாக மீளவில்லை. ஆரம்பக்கட்டத்தில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரத்திற்குள்ளாக இருக்கிறது. கொரோனா வைரஸ் போடும் பணியும் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1,07,15,204 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் விரைவில் மக்களுக்கு தடுப்பூசிகள் கொடுக்கும் சேவை தொடங்கும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு : முழு விவரம் இதோ!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,993 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 101 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 10,307 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,09,77,387 ஆக அதிகரித்துள்ளதாகவும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,56,212 ஆக அதிகரித்துள்ளதாகவும் 1,43,127 பேருக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.