புதிய உச்சத்தில் கொரோனா.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணம் : அதிர்ச்சி தகவல்!

 

புதிய உச்சத்தில் கொரோனா.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணம் : அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாம் நாளை நாளுக்கு நாள் வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கான தடுப்பூசி போடப்பட்டு வரும் சூழலிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பது மக்கள் மத்தியில் பீதியை அதிகரிக்கச் செய்துள்ளது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியதன் பேரில், மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும், பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

புதிய உச்சத்தில் கொரோனா.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணம் : அதிர்ச்சி தகவல்!

இந்த நிலையில், புதிதாக 1,15,736 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பதாகவும் 59,856 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி இருப்பதாகவும் 8,43,473 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 8,70,77,474 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய உச்சத்தில் கொரோனா.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணம் : அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் முதல் அலையின் போது அதிகபட்சமாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 98 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதுகாப்பு உறுதியானது. இதையடுத்து, கிட்டத்தட்ட 6 மாதங்கள் கழித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டிய நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவாக 1 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது