‘குறைந்து வரும் கொரோனா பரவல்’ ஒரே நாளில் 36,469 பேர் மட்டுமே பாதிப்பு!

 

‘குறைந்து வரும் கொரோனா பரவல்’ ஒரே நாளில் 36,469 பேர் மட்டுமே பாதிப்பு!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

‘குறைந்து வரும் கொரோனா பரவல்’ ஒரே நாளில் 36,469 பேர் மட்டுமே பாதிப்பு!

கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த மாதம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருக்கிறது என்றே சொல்லலாம். நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வந்த நிலையில், தற்போது பாதிப்பு பாதிக்கு பாதியாக குறைந்திருக்கிறது. இருப்பினும், தீபாவளி நெருங்குவதால் மக்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

‘குறைந்து வரும் கொரோனா பரவல்’ ஒரே நாளில் 36,469 பேர் மட்டுமே பாதிப்பு!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 36,469 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 79,46,429 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 488 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகள் 1,19,502 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 63,842 பேர் டிஸ்சார்ஜ் ஆகியதால் தற்போது 6,25,857 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.