’50 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு’ விரைவில் மீளுமா இந்தியா!

 

’50 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு’ விரைவில் மீளுமா இந்தியா!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் நாளொன்றுக்கு சுமார் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில், பாதிப்பு தற்போது 50 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கிறது. இதனால் விரைவில் இந்தியா இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

’50 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு’ விரைவில் மீளுமா இந்தியா!

இந்த நிலையில் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் 46,791 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 75.97 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 587 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகள் 1,15,197 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 67.33 லட்சம் பேர் குணமடைந்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7.48 லட்சமாக குறைந்திருப்பதாகவும் இதுவரை 9.61 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.