‘இந்தியாவில் ஒரே நாளில் 45,903 பேருக்கு கொரோனா’: 490 பேர் மரணம்!

 

‘இந்தியாவில் ஒரே நாளில் 45,903 பேருக்கு கொரோனா’: 490 பேர் மரணம்!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

‘இந்தியாவில் ஒரே நாளில் 45,903 பேருக்கு கொரோனா’: 490 பேர் மரணம்!

கடந்த மாதத்தில் இருந்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உறுதியாகும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகி வந்த நிலையில், தற்போது கொரோனா உறுதியாகும் எண்ணிக்கை பாதிக்கு பாதியாக குறைந்திருக்கிறது. அதே போல, உயிரிழப்புகளும் குறைந்த வண்ணமே உள்ளது. இருப்பினும், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசும் மாநில அரசுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

‘இந்தியாவில் ஒரே நாளில் 45,903 பேருக்கு கொரோனா’: 490 பேர் மரணம்!

இந்த நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் 45,903 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 85,53,657 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல ஒரே நாளில் 490 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,26,611 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை 79,17,373 பேர் குணமடைந்த நிலையில், 5,09,673 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.