ஒரே நாளில் 48,268 பேருக்கு கொரோனா; 551 பேர் உயிரிழப்பு!

 

ஒரே நாளில் 48,268 பேருக்கு கொரோனா; 551 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஒரே நாளில் 48,268 பேருக்கு கொரோனா; 551 பேர் உயிரிழப்பு!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையிலும், மத்திய அரசு வரும் நவம்பர் 30 வரை ஊரடங்கை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மாதத்திற்கு கொடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் தளர்வுகளும் அடுத்த மாதம் இறுதி வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், பண்டிகை நெருங்குவதால் மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ஒரே நாளில் 48,268 பேருக்கு கொரோனா; 551 பேர் உயிரிழப்பு!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 48,268 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 81,37,119 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் 551 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,21,641 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை கொரோனாவில் இருந்து 74,32,829 பேர் குணமடைந்ததால் தற்போது 5,82,649 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.