இந்தியாவில் ஒரே நாளில் 61,267 பேருக்கு கொரோனா; 884 பேர் மரணம்!

 

இந்தியாவில் ஒரே நாளில் 61,267 பேருக்கு கொரோனா; 884 பேர் மரணம்!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வரும் சூழலில், குணமடைவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயரத் தொடங்கியிருக்கிறது. அதே போல, கடந்த மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனால் விரைவில் இந்தியா கொரோனா இல்லாத நிலைக்கு திரும்பும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 61,267 பேருக்கு கொரோனா; 884 பேர் மரணம்!

அதில், ஒரே நாளில் 61,267 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 66,85,082 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஒரே நாளில் 884 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,03,569 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து 56.62 லட்சம் பேர் குணமடைந்ததால் தற்போது 9.19 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று உயிரிழப்புகளும் பாதிப்பு எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.