‘இதுவரை இல்லாத அளவாக’ ஒரே நாளில் 83,341 பேருக்கு கொரோனா; 1,096 பேர் பலி!

 

‘இதுவரை இல்லாத அளவாக’ ஒரே நாளில் 83,341 பேருக்கு கொரோனா; 1,096 பேர் பலி!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது அனைவரும் அறிந்தவையே. இதிலிருந்து மக்களை காக்க மத்திய அரசின் ஆலோசனைப்படி, மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆரம்பக்கட்டத்தில் தீவிரமாக இந்த கொரோனாவுடன் வாழ தற்போது பழகிக் கொண்டனர். இதனால் பல மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதில் ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தி என்னெவென்றால், பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது.

‘இதுவரை இல்லாத அளவாக’ ஒரே நாளில் 83,341 பேருக்கு கொரோனா; 1,096 பேர் பலி!

இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,36,747 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 83,341 பேருக்கு பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும் 1,096 பேர் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68,472 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 66,659 பேர் குணமடைந்ததால் 8.31 லட்சம் பேருக்கு தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.