லடாக்கில் இந்திய ராணுவத்தை நோக்கிச் சுட்ட சீனா…. அதிகாரி, வீரர்கள் இருவர் பலி

 

லடாக்கில் இந்திய ராணுவத்தை நோக்கிச் சுட்ட சீனா…. அதிகாரி, வீரர்கள் இருவர் பலி

லடாக் எல்லையில் சீன ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் இரண்டு ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

லடாக்கில் இந்திய ராணுவத்தை நோக்கிச் சுட்ட சீனா…. அதிகாரி, வீரர்கள் இருவர் பலிஇந்திய எல்லையில் இதுவரை பாகிஸ்தான் மட்டுமே அத்துமீறி இந்தியப் படைகள் மீது தாக்குதல் நடத்தி வந்தது. தற்போது சீனாவும் தாக்கத் தொடங்கியுள்ளது. நேற்று லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் இந்திய ராணுவ அதிகாரி, இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. சீனாவின் கோர முகம் என்று இந்த தாக்குதல் சம்பவத்தை இந்திய ராணுவம் வர்ணித்துள்ளது. பதற்றத்தைத் தவிர்க்க இந்தியா, சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் அங்கு தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.