சென்னை மெரினா கடற்கரையில் சுதந்திர தின விழா ஒத்திகை! போக்குவரத்து மாற்றம்!

 

சென்னை மெரினா கடற்கரையில் சுதந்திர தின விழா ஒத்திகை! போக்குவரத்து மாற்றம்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவிலும் தொடர்வதால் கொண்டாட்டங்கள் பலவும் தவிர்க்கப்பட்டு வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் சுதந்திர தின விழா ஒத்திகை! போக்குவரத்து மாற்றம்!

அதன்படி  ஆகஸ்ட் 15 ஆம் தேதி 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சமூக இடைவெளி, முகக கவசம் அணிதல் உள்ளிட்டவை அவசியம் பின்பற்ற வேண்டும் என கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறை வழிக்காட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்திலும் சுதந்திர தினவிழா பாதுகாப்புடன் கொண்டாடப்படவுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் சுதந்திர தின விழா ஒத்திகை! போக்குவரத்து மாற்றம்!

இந்நிலையில் சுதந்திர தின விழா ஒத்திகை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் வடக்கு கோட்டை பக்க சாலை- ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு -முத்துசாமி சாலை- முத்துசாமி பாலம்- அண்ணா சாலை- வாலாஜா சாலை வழியாகச் செல்லலாம்.

சென்னை மெரினா கடற்கரையில் சுதந்திர தின விழா ஒத்திகை! போக்குவரத்து மாற்றம்!

 

அண்ணா சதுக்கத்தின் வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலை-அண்ணாசாலை-முத்துசாமி பாலம்-முத்துசாமி சாலை-ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாகச் செல்லலாம். அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிஸ் செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை- ராஜா அண்ணாமலை மன்றம்-என்.எஸ்.சி.போஸ் சாலை வழியாகச் செல்லலாம்.

சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி வரும் 10, 13 ஆம் தேதிகளிலும் மெரினா கடற்கரை பகுதியில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.