சட்டென்று சரிந்த டாப் ஆர்டர்… நிலைத்த ஸ்ரேயாஷ்… டஃப் கொடுத்த இங்கிலாந்து!

 

சட்டென்று சரிந்த டாப் ஆர்டர்… நிலைத்த ஸ்ரேயாஷ்… டஃப் கொடுத்த இங்கிலாந்து!

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலாவதாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று அகமதாபாத்திலுள்ள மோடி ஸ்டேடியத்தில் முதல் டி20 போட்டி தொடங்கியது.

Image

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இந்திய அணியைப் பொறுத்தவரை ஷர்துல் தாகூர் வரை பேட்டிங் ஆடும் பெரும் படையைக் கொண்டிருந்தது. அதேபோல புவனேஸ்வர் குமார் அணிக்குள் திரும்பியிருக்கிறார். ரோஹித் சர்மா உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். டி20 போட்டிகளில் கில்லியான ராகுல் ஆரம்பமே அதிர்ச்சி அளித்தார். வந்த வேகத்தில் கிங் கோலியும் டக் அவுட்டாகி வெளியேறினார். ஷிகர் தவானும் 4 ரன்களில் வெளியேற டாப் ஆர்டர் மொத்தமாகச் சரிந்தது.

Image

ரிஷப் பண்ட் கொஞ்ச நேரம் ஆடினாலும் அவரது கேமை ஆடுவதற்குள் 21 ரன்களில் நடையைக் கட்டினார். அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவும் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஸ்ரேயாஷ் ஐயர் மட்டுமே நிலைத்து நின்று ஆடினார்.