தீராத வயிற்று வலி- வீதியில் தீக்குளித்து தற்கொலை செய்த இளம்பெண்
தேனி
தேனி அருகே வயிற்று வலி தொல்லையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த சீலையம்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் முத்துச்செல்வி (20). இவருக்கு அடிக்கடி வயிற்றில் வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும், நோய் குணமடையாததால் முத்துச்செல்வி விரக்தியில இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்துக்கொண்டு வீதிக்கு வந்த அவர், திடீரென தனது உடலில் ஊற்றிகொண்டு, தீ வைத்துக்கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சென்று தீயை அணைக்க முயற்சித்தனர். அதற்குள்ளாக முத்துலட்சுமி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அந்த பகுதியினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சின்னமனூர் போலீசார், முத்துச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.