ஈரோட்டில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை

 

ஈரோட்டில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை

ஈரோட்டில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல தனியார் நிறுவனத்தில் பிரபல தொழிலதிபர்கள் பலர் பங்குதாரர்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்த அச்சோசியட்ஸ் சார்பில் கட்டுமான நிறுவனம் , பஸ் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்றுவருகின்றன.

ஈரோட்டில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை

மேலும் இந்த கட்டுமான நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் பல்வேறு அரசு கட்டடங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணியும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் அரசுக்கு முறையாக வருமான வரிக்கட்டாமல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து இன்று மாலை கோவை , மதுரை , சென்னை , உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த 50 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈரோட்டிலுள்ள அலுவலகம் , உரிமையாளர்களின் வீடுகள் என மொத்தம் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.