“இயேசு அழைக்கிறார்” பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை!

 

“இயேசு அழைக்கிறார்” பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை!

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

“இயேசு அழைக்கிறார்” பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை!

தமிழகத்தில் கடந்த ஆண்டின் இறுதியில் இருந்தே பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பில் ஈடுபடும் பிரபல நிறுவனங்களை குறிவைத்த வருமான வரித்துறையினர் அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களையும், கணக்கில் வராத ரொக்க பணத்தையும் கைப்பற்றி வருகின்றனர்.

“இயேசு அழைக்கிறார்” பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை!

இந்நிலையில் கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்பட 28 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மதப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வரும் பால்தினகரன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது . இயேசு அழைக்கிறார் குழுமத்துக்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ள நிலையில் வருமானவரித் துறையினர் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.