“ஸ்டாலின் தங்கியிருந்த கல்லூரியில் ரெய்டு”: எ.வ.வேலுவுக்கு பொறிவைத்த வருமான வரித்துறை!!

 

“ஸ்டாலின் தங்கியிருந்த கல்லூரியில் ரெய்டு”: எ.வ.வேலுவுக்கு பொறிவைத்த வருமான வரித்துறை!!

திமுக முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான எ.வ.வேலுவிற்கு சொந்தமான கல்லூரி அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.

“ஸ்டாலின் தங்கியிருந்த கல்லூரியில் ரெய்டு”: எ.வ.வேலுவுக்கு பொறிவைத்த வருமான வரித்துறை!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பணம் பட்டுவாடா ,பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக வருமானவரித் துறையினர் தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர் . நேற்று தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணனின் மகன் பிரகாஷ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்ததால் ஐடி ரெய்டு நடந்தாக குற்றச்சாட்டும் எழுந்தன. அத்துடன் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பொருளாளர் சந்திரசேகரனின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் சுமார் கணக்கில் வராத 80 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

“ஸ்டாலின் தங்கியிருந்த கல்லூரியில் ரெய்டு”: எ.வ.வேலுவுக்கு பொறிவைத்த வருமான வரித்துறை!!

இந்நிலையில் எ.வ. வேலுவை ஆதரித்து திருவண்ணாமலையில் மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டிருக்கும் சூழலில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். எ.வ. வேலுவின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.20க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா என்ற புகாரின் அடிப்படையில் எ.வ. வேலுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. கல்லூரி, கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை செய்து வருவதால் அப்பகுதி பரபரப்பாக மாறியுள்ளது.திருவண்ணாமலையில் ஸ்டாலின் தங்கியிருந்த எ.வ.வேலுவின் கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.