குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்ற சம்பவம்… சந்தேகத்தை கிளப்பும் வனத்துறையினர்!

 

குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்ற சம்பவம்… சந்தேகத்தை கிளப்பும் வனத்துறையினர்!

தஞ்சையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த குழந்தைகளை குரங்குகள் தூக்கி சென்று அகழியில் வீசியதில் குழந்தை இறந்து விட்டதாக கூறப்படும் நிலையில், குரங்கு குழந்தையை தூக்கி சென்றதற்கான எந்த தடயமும் அதன் உடலில் இல்லை என வனத்துறையினர் கூறியுள்ளனர்.

தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசிக்கும் ராஜா – புவனேஸ்வரி தம்பதிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு புவனேஸ்வரி குழந்தைகளை தூங்கவைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது ஓட்டை பிரித்து உள்ளே வந்த குரங்கு குழந்தை ஒன்று தூக்கி சென்று இருந்த குளத்தின் பக்கத்தில் இருந்த சுவற்றின் மீது வைத்து சென்றுள்ளது. அப்போது மற்றொரு குழந்தையை அகழியின் தள்ளிவிட்டு சென்றது. ஓட்டின் மேல் வீசப்பட்ட குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதாகவும், அகழியில் வீசப்பட்ட குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் குழந்தையின் தாய் கூறியிருந்தார்.

குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்ற சம்பவம்… சந்தேகத்தை கிளப்பும் வனத்துறையினர்!

இந்நிலையில் சம்பவம் நடந்த பகுதியிலும் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்களிடம் வனத்துறையினர் விவரங்களை கேட்டறிந்துள்ளனர். குழந்தையின் மேல் குரங்கின் நகக்கீறலோ எந்தவிதமான காயமோ இல்லை எனவும் குரங்கின் ரோமம் கூட குழந்தைகள் மேல் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாக வனத்துறையினர் கூறியுள்ளனர். மேலும் குழந்தையை குரங்குகள் தூக்கிச் சென்றால், அதை லேசில் விட்டுவிடாது என்றும், ஒரு கையில் குழந்தையை தூக்கிக் கொண்டு தாவிச் செல்வதற்கான வாய்ப்புகள் கிடையாது எனவும் வனத்துறையினர் கூறுகின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இறந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முழுமையாக விவரங்கள் தெரியவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.