கோவையில் அரசு நலத்திட்டங்கள் தொடங்கிவைப்பு

 

கோவையில் அரசு நலத்திட்டங்கள் தொடங்கிவைப்பு

கோவை

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு முடிவுற்ற அரசு நலத்திட்ட பணிகளை திறந்துவைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி,

கோவையில் அரசு நலத்திட்டங்கள் தொடங்கிவைப்பு

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குளத்துப்பாளையம் பகுதியில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடம் மற்றும் பொதுவிநியோக கடை ஆகியவற்றை அமைச்சர் திறந்துவைத்தார். தொடர்ந்து தொண்டாமுத்தூர் நரசிபுரம் சாலை மேம்பாட்டு பணி மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டுமான பணிக்கு பூமிபூஜையை துவக்கி வைத்த அமைச்சர்,

கோவையில் அரசு நலத்திட்டங்கள் தொடங்கிவைப்பு

கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியில் 9 பேருக்கு, மானிய விலை இருசக்கர வாகனங்களை வழங்கினார். தாளியூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியின்போது பொதுமக்களுடன் சேர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கபசுர குடிநீர் குடித்தார்.