திருவள்ளூரில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்று! ஒரே நாளில் 357 பேருக்கு கொரோனா உறுதி!

 

திருவள்ளூரில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்று! ஒரே நாளில் 357 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,985 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 70 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

திருவள்ளூரில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்று! ஒரே நாளில் 357 பேருக்கு கொரோனா உறுதி!

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,551 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 87,235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

திருவள்ளூரில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்று! ஒரே நாளில் 357 பேருக்கு கொரோனா உறுதி!

இந்நிலையில் திருவள்ளூரில் மேலும் 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு தொற்று பாதிப்பு 9,781 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக பள்ளிபட்டியில் 65, ஆர்கே பேட்டையில் 54, வில்லிவாக்கம் 48 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.