கணவர் இறந்த வேதனையில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

கணவர் இறந்த வேதனையில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

மதுரை

மதுரையில் காதல் கணவர் உடல்நல குறைவால் இறந்ததால், வேதனையில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரை சேர்ந்தவலை சரவணகுமார். இவரது மகள் தேவதர்ஷினி (20). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த பாலவிக்னேஷ் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். தம்பதியினர் இருவரும் ஜெய்ஹிந்த்புரம் வள்ளுவர் தெருவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

கணவர் இறந்த வேதனையில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

கூலி தொழிலாளி ஆன பாலவிக்னேஷ், கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் உயிரிழந்தார். காதல் கணவர் இறந்ததால் மனமுடைந்து காணப்பட்ட தேவதர்ஷினிக்கு, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில், வாழ்வில் விரக்தியடைந்த தேவதர்ஷினி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருததுவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து தேவதர்ஷினியின் அண்ணன் முரளிதரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவர் இறந்த வேதனையில் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.