மே மாதத்தில் மட்டும் கொரோனாவால் 10,000 பேர் உயிரிழப்பு

 

மே மாதத்தில் மட்டும் கொரோனாவால் 10,000 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடியே 80லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 3லட்சத்து 29ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20லட்சத்து 96ஆயிரத்து 516ஆக அதிகரித்துள்ளது. ஆனால் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 3,1,781ஆக உள்ளது. இன்று இன்று 478பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,232ஆக அதிகரித்துள்ளது.

மே மாதத்தில் மட்டும் கொரோனாவால் 10,000 பேர் உயிரிழப்பு

இந்நிலையில் தமிழகத்தில் மே மாதத்தில் மட்டும் கொரோனா தொற்று காரணமாக 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மே 1 முதல் 31 வரை 10,186 பேர் உயிரந்துள்ளனர். 2020 மார்ச் முதல் 2021 ஏப்ரல் வரை 14,046 பேர் உயிரிழந்து இருந்தனர். இந்த எண்ணிக்கை ஒரே மாதத்தில் ஒரே அடியாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரபடி, 24,232 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஒரு ஆண்டு கொரோனா இழப்பு எண்ணிக்கையை கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் நெருங்கியது தமிழகம்.