வீட்டை காலி செய்த வாடகை தாரர் -எலும்புகூட்டால் அதிர்ச்சியான உரிமையாளர் -பெண்ணை புதைத்து விட்டு ஓடிப்போன குடும்பத்தினர் ..

 

வீட்டை காலி செய்த வாடகை தாரர் -எலும்புகூட்டால் அதிர்ச்சியான உரிமையாளர் -பெண்ணை புதைத்து விட்டு ஓடிப்போன குடும்பத்தினர் ..

வீட்டுக்கு வாழ வந்த மருமகளை ,குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கொன்று, வீட்டின் ஒரு அறையில் புதைத்து விட்டு வீட்டை காலி செய்து விட்டு தப்பி ஓடிய கொடுமை அரங்கேறியுள்ளது

வீட்டை காலி செய்த வாடகை தாரர் -எலும்புகூட்டால் அதிர்ச்சியான உரிமையாளர் -பெண்ணை புதைத்து விட்டு ஓடிப்போன குடும்பத்தினர் ..மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள போய்சர் நகரில் உள்ள ஜெயின் என்பவரின் வீட்டில் வாடகைக்கு கணவர் தீபக், அவரது மாமியார் பவன் ஜா, மற்றும் நாத்தனார் பச்சுதேவி ஆகியோருடன் வசித்து வந்த புல்பூல் தீபக் ஜா என்ற 20 வயது பெண்ணை அவரின் குடும்பத்தினர் அனைவரும் கொடுமை செய்துள்ளனர் .பிப்ரவரி 2019ல் அந்த பெண்ணை தீயிட்டு கொளுத்த முயன்று அனைவரும் போலீசில் சிக்கிய வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது .அப்போதே அந்த பெண்ணை அவர்கள் அனைவரும் அந்த வழக்கினை வாபஸ் பெற சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர் .

வீட்டை காலி செய்த வாடகை தாரர் -எலும்புகூட்டால் அதிர்ச்சியான உரிமையாளர் -பெண்ணை புதைத்து விட்டு ஓடிப்போன குடும்பத்தினர் ..அதற்கு அந்த பெண் மறுக்கவே அந்த பெண்ணை அவர்கள் அனைவரும் சேர்ந்து கொலை செய்து ஒரு ரூமில் புதைத்து விட்டு வீட்டை காலி செய்து விட்டு ஓடி விட்டனர் .நீண்ட நாட்களாக வாடகை வராததால் பூட்டியிருக்கும் தன்னுடைய வீட்டை வந்து திறந்து பார்த்தார் அந்த வீட்டு உரிமையாளர் ஜெயின் .அப்போது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது .ஆம் அந்த வீட்டின் ஒரு அறையில் கடந்த 18 மாதமாக ஒரு புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் எலும்புக்கூடுகளும் ,அழுகிய நாற்றமும் அடித்தது .இதனால் அவர் போலீசில் தன்னுடைய வீட்டில் குடியிருந்து விட்டு தப்பி ஓடிய பீகார் மாநிலத்தை சேர்ந்த தீபக் குடும்பத்தினர் மீது போலீசில் புகாரளித்தார் .போலீசார் அந்த பிஹார் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி ஒரு போலீஸ் குழுவை பீகாருக்கு அனுப்பியுள்ளது .