ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சிதம்பரம்…கடுப்பில் திமுகவினர்!

 

ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சிதம்பரம்…கடுப்பில் திமுகவினர்!

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு இரவு 7 மணிக்கு நடந்து முடிந்தது. திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி என ஐந்துமுனை போட்டி நிலவியது. இதில் யார் வெற்றிபெற போகிறார்கள்? என்பது வரும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும். குறிப்பாக திமுக கூட்டணியில் காங்கிரஸ்,விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதில் காங்கிரஸுக்கு 25 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு அக்கட்சி போட்டியிட்டது.

ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சிதம்பரம்…கடுப்பில் திமுகவினர்!

இந்த சூழலில் ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் காரைக்குடி தொகுதியை திமுகவிடம் பேசி காங்கிரஸுக்காக வாங்கி கொடுத்தனர். இதனால் இவர்கள் இருவருமே காரைக்குடியில் பாஜகவுக்கு எதிராகவும், காங்கிரஸுக்கு ஆதரவாகவும் பரப்புரை மேற்கொண்டனர். இதனால் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட யாரும் காரைக்குடி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.

ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சிதம்பரம்…கடுப்பில் திமுகவினர்!

இதனிடையே காரைக்குடியில் திமுகவினர் சிலர் காங்கிரஸுக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்துள்ளனர். இதை காரைக்குடி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி உறுதிப்படுத்தும் வகையில் ஆடியோ ஆதாரம் ஒன்றையும் ப.சிதம்பரத்திடம் கொடுத்துள்ளார். இதை நேரடியாக ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்ற ப.சிதம்பரம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதனால் கடுப்பான ஸ்டாலின், சிதம்பரத்திடம் ஆறுதலாக பேசியதுடன், நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாகவும் தெரிகிறது.

ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சிதம்பரம்…கடுப்பில் திமுகவினர்!

இதனால் அதிருப்தி அடைந்துள்ள திமுகவினர் சிலர் காங்கிரஸ்காரங்களே கை சின்னத்துக்கு ஓட்டுப் போடாதீங்கன்னு பிரச்சாரம் பண்ணுனாங்க, அவங்கள முதல்ல சிதம்பரம் கண்டிக்கட்டும் என்றும் புலம்பு வருகிறார்களாம்.