இமாச்சல பிரதேசத்தில் கர்ப்பிணி பசுக்கு உணவாக கோதுமை மாவுக்குள் வெடி வைத்து கொடுத்த கொடூரம்…

 

இமாச்சல பிரதேசத்தில் கர்ப்பிணி பசுக்கு உணவாக கோதுமை மாவுக்குள் வெடி வைத்து கொடுத்த கொடூரம்…

இமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்தத்தா பகுதியில் கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவுக்குள் வெடிமருந்தை வைத்து சில நயவஞ்சர்கள் கொடுத்துள்ளனர். அந்த பசு அதனை சாப்பிட்டபோது வாய்க்குள் வெடி வெடித்தது. இதனால் அந்த பசுவின் வாய் பகுதி கடுமையாக காயம் அடைந்தது. பசுவின் வாய் கடுமையாக காயம் அடைந்திருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இமாச்சல பிரதேசத்தில் கர்ப்பிணி பசுக்கு உணவாக கோதுமை மாவுக்குள் வெடி வைத்து கொடுத்த கொடூரம்…

பசுவின் உரிமையாளர் குர்தியால் சிங் இது குறித்து கூறுகையில், தனது பக்கத்து வீட்டு நந்தலால்தான் பசுவுக்கு வெடிபொருட்களால் உணவு அளித்ததாக குற்றச்சாட்டினார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், இது போன்ற சம்பவங்களை சகித்து கொள்ள முடியாது மற்றும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசத்தில் கர்ப்பிணி பசுக்கு உணவாக கோதுமை மாவுக்குள் வெடி வைத்து கொடுத்த கொடூரம்…

கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாச்சி பழத்துக்குள் வெடி வைத்து கொலை செய்த சம்பவம் நாட்டில் பெரிய அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவத்தின் தாக்கமே குறையாத நிலையில், கர்ப்பிணி பசுக்கு கோதுமை மாவுக்குள் வெடிவைத்து உணவாக கொடுத்து வெடிக்க செய்து சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.