’’இப்படிப்பட்ட புனிதர்கள் வாழ்ந்த பூமியில்…’’-நடிகர் விவேக் வேதனை
உத்தரப்பிரதேசம் ஹத்ராவில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த விவகாரம் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், புலம்பெயர் தொழிலாளர் தொடர்பான வழக்கில், ’’பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளது
இந்தியா! புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது’’ என்று உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்திருக்கிறது.
அன்பே சிவம்- திருமூலர்; அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?- திருவள்ளுவர்; ஜீவகாருண்யமே மோட்சத் திறவுகோல்-வள்ளலார் எல்லாவற்றுக்கும் மேல் அன்பு- விவேகானந்தர். இப்படிப்பட்ட புனிதர்கள் வாழ்ந்த பூமியில்- கற்பழிப்பு, கொலை. 😭
— Vivekh actor (@Actor_Vivek) October 1, 2020
இது தொடர்பாக நடிகர் விவேக்கும், ‘’அன்பே சிவம்- திருமூலர்; அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?- திருவள்ளுவர்; ஜீவகாருண்யமே மோட்சத்
திறவுகோல்-வள்ளலார் எல்லாவற்றுக்கும் மேல் அன்பு- விவேகானந்தர். இப்படிப்பட்ட புனிதர்கள் வாழ்ந்த பூமியில்- கற்பழிப்பு, கொலை’’என்று தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.