கோடை வெயிலின் தாக்கம் : தண்ணீர், நீர் மோர் பந்தல் அமைத்திடுங்கள்!!

 

கோடை வெயிலின் தாக்கம் :  தண்ணீர், நீர் மோர் பந்தல் அமைத்திடுங்கள்!!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் பயன்பெற தண்ணீர், நீர் மோர் பந்தல்களை அமைத்திட வேண்டும் என கட்சியினருக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோடை வெயிலின் தாக்கம் :  தண்ணீர், நீர் மோர் பந்தல் அமைத்திடுங்கள்!!

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன், “கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இன்னும் போகப்போக வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நல்நெஞ்சங்களின் நிறைந்திருக்கின்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்களையும், நீர்மோர் பந்தல்களையும் திறந்திட வேண்டுகிறேன். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதியில் இருக்கின்ற கழக நிர்வாகிகளும் உடன் பிறப்புகளும் மேற்கொண்ட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பாதசாரிகளும், இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு உதவியாக அமைந்திட வேண்டும். அதற்கு தகுந்த இடங்களை தேர்வு செய்து தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை நிறுவிட வேண்டுகிறேன். மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீர் மற்றும் மோர் பந்தல்களை அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைப்பிடித்து அதிலும் உரிய கவனம் செலுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.