தீவிரமாகும் கொரோனா : திருவள்ளூரில் பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது!

 

தீவிரமாகும் கொரோனா : திருவள்ளூரில் பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,472 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,92,964 ஆக அதிகரித்துள்ளது.

தீவிரமாகும் கொரோனா : திருவள்ளூரில் பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,232 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 90,900பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

தீவிரமாகும் கொரோனா : திருவள்ளூரில் பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது!

இந்நிலையில் திருவள்ளூரில் மேலும் நண்பகல் வரை புதிதாக 383 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 11,010  ஆக உயர்ந்துள்ளது.