தீவிரமாகும் கொரோனா : திருவள்ளூரில் பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது!
Jul 24, 2020, 13:33 IST1595577801000
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,472 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,92,964 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,232 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 90,900பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில் திருவள்ளூரில் மேலும் நண்பகல் வரை புதிதாக 383 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 11,010 ஆக உயர்ந்துள்ளது.