நொடிப்பொழுதில் நோய் எதிர்ப்பு சக்தி கொடுத்து ,வைரஸை பொடி பொடியாக்கும் பொருள்

 

நொடிப்பொழுதில் நோய் எதிர்ப்பு சக்தி கொடுத்து ,வைரஸை பொடி பொடியாக்கும் பொருள்

இந்த வைரஸ் காலத்தில் துளசி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் .அதை பற்றி பார்க்கலாம்

நொடிப்பொழுதில் நோய் எதிர்ப்பு சக்தி கொடுத்து ,வைரஸை பொடி பொடியாக்கும் பொருள்

துளசியில்  ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. துளசி பல நோய்  தொற்றுக்களை நீக்க பயன்படுகிறது. இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராட தேவையான நோயெதிர்ப்பு சக்தியை உடனே அளிக்கிறது.மேலும் துளசியின் பயன்களை பட்டியளிட்டுள்ளோம்

​சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நீங்கள் வெறும் வயிற்றில் துளசியை உட்கொள்ளும்போது அது உங்கள் இரத்தத்திலிருந்து நச்சுகளை வெளியேற்றி நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. முகப்பரு மற்றும் சரும கறைகளின் தோற்றத்தை குறைக்கிறது, இது உங்களுக்கு குறைபாடற்ற சருமத்தை அளிக்கிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உங்க சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. சருமழகை மேம்படுத்துகிறது.

காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும்.

தொண்டைப்புண்

தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.

தலை வலி

உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது தெரியுமா? ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.

​உடல் எடையை குறைக்க பயன்படுகிறது

துளசி செரிமானத்திற்கு உதவுவதோடு உடலிருந்து நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை வெகுவாக குறைக்க பயன்படுகிறது. உடல் மெட்டபாலிசத்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது. இதன் மூலம் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.