“பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவியரை பாதுகாக்க…” : பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!

 

“பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவியரை பாதுகாக்க…” : பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!

பாலியல் தொல்லை குறித்து மாணவ மாணவிகள் புகார் அளிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்கப்பட்டு, சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரின் கட்டுப்பாட்டில் அதை செயல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 17ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.அதனடிப்படையில் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுக்காக்க அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கட்டணம் இல்லா தொலைபேசி ,மின்னஞ்சல் வசதி கூடிய கட்டுப்பாட்டு அறை பள்ளி இயக்குனர் வளாகத்தில் அமைக்கப்படும் , ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் பாதுகாப்பு குழு அமைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

“பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவியரை பாதுகாக்க…” : பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவியரை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

“பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவியரை பாதுகாக்க…” : பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!

பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்புக்கு பெண் எஸ்.பி., அளவிலான போலீஸ் அதிகாரி, சமூக பாதுகாப்பு அலுவலர், சட்ட அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், உளவியல் நிபுணர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை உடனடியாக அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளிகளில் புகார் பெட்டி அமைத்தல், அருகாமையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய தொடர்பு எண்களை பள்ளி வளாகத்தில் வெளியிடுதல் போன்ற பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டும்.மேற்கண்ட உத்தரவுகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.