’’நலமுடன் இருக்கிறேன்; முதல்வர், துணை முதல்வர் உட்பட அனைவருக்கும் நன்றி’’-கொரோனாவிலிருந்து மீண்ட ராமராஜன்

 

’’நலமுடன் இருக்கிறேன்; முதல்வர்,  துணை முதல்வர் உட்பட அனைவருக்கும் நன்றி’’-கொரோனாவிலிருந்து மீண்ட ராமராஜன்

இலேசான காய்ச்சல், இருமலுடன் மூச்சுத்திணறலும் இருந்ததால் சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற நடிகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராமராஜனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, அவர் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.

’’நலமுடன் இருக்கிறேன்; முதல்வர்,  துணை முதல்வர் உட்பட அனைவருக்கும் நன்றி’’-கொரோனாவிலிருந்து மீண்ட ராமராஜன்

ராமராஜன் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த நாட்களில் அவர் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். அதிமுகவின் பேச்சாளராகவும் இருக்கும் அவருக்கு அக்கட்சியின் தலைவர்கள் பலரும், ராமராஜன் விரைவில் குணமடைந்து திரும்புவார் என்று நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கும் ராமராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சில நாட்களுக்கு முன்பு எனக்கு கொரோனாவின் தாக்கம் இருக்குமோ என்ற அய்யப்பாடு இருந்ததால் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மட்டுமல்ல அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணி புரிவதை கண்டேன். எனக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர். உயர் தர சிகிச்சை அனைவருக்கும் அங்கு கிடைக்கிறது. இதற்காக முதல்வர் அண்ணன் எடப்பாடி யாருக்கும், துணை முதல்வர் அண்ணன் ஒ.பி.எஸ்க்கும், சுகாதார துறை அமைச்சர் சகோதரர் விஜயபாஸ்கருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

’’நலமுடன் இருக்கிறேன்; முதல்வர்,  துணை முதல்வர் உட்பட அனைவருக்கும் நன்றி’’-கொரோனாவிலிருந்து மீண்ட ராமராஜன்

எனக்கு சிகிச்சை முடிந்து இன்று வீட்டிற்கு வந்து விட்டேன். இந்த இடைபட்ட நாட்களில் எனக்காக பிரார்த்தனை செய்து என் மீது அக்கறை கொண்டு தொலைபேசியிலும், அலைபேசியிலும், நேரிலும் நலம் விசாரித்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சக நடிகர் நடிகைகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக துறை நண்பர்களுக்கும் , மக்கள் தொடர்பாளர்கள் மற்றும் என் ரசிகபெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

’’நலமுடன் இருக்கிறேன்; முதல்வர்,  துணை முதல்வர் உட்பட அனைவருக்கும் நன்றி’’-கொரோனாவிலிருந்து மீண்ட ராமராஜன்