‘திருமணத்தை மீறிய உறவு’ தலைமைக் காவலரின் மனைவி அடித்துக் கொலை!

 

‘திருமணத்தை மீறிய உறவு’ தலைமைக் காவலரின் மனைவி அடித்துக் கொலை!

ஓமலூர் அருகே தலைமைக் காவலரின் மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கணவாய்புதூர் ஊராட்சியில் வசித்து வருபவர் சின்னதுரை. இவர் மத்திகிரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில், மனைவி செங்கொடி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணத்தை மீறிய தொடர்பால் வேறு ஒருவருடன் சென்றிருக்கிறார். இதனால் குழந்தைகளை சின்னதுரையின் அக்கா,கவனித்துக் கொண்டு வந்துள்ளார்.

‘திருமணத்தை மீறிய உறவு’ தலைமைக் காவலரின் மனைவி அடித்துக் கொலை!

இந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய சின்னதுரையின் மனைவி மீண்டும் வீட்டுக்கு வந்திருக்கிறார். இது என் வீடு, நான் இங்கே தான் இருப்பேன் என அவர் கூறியதோடு வீட்டுக்கு வரும் சின்னதுரையின் உறவினர்கள் எல்லாரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னதுரை மனைவி செங்கொடியை கண்டித்துள்ளார். நேற்று சின்னதுரையின் வீட்டுக்கு சென்ற அவரது அண்ணன் ரத்தினம் என்பவரையும், செங்கொடி திட்டியிருக்கிறார்.

‘திருமணத்தை மீறிய உறவு’ தலைமைக் காவலரின் மனைவி அடித்துக் கொலை!

கடுப்பான ரத்தினம் அருகே இருந்த கட்டையை எடுத்து தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த செங்கொடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். செங்கொடியை கொலை செய்த ரத்தினம் தானாக நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.