கழுத்தறுத்து, மர்ம உறுப்பை துண்டித்து கொடூர கொலை : கள்ளத்தொடர்பால் நேர்ந்த விபரீதம்!

 

கழுத்தறுத்து, மர்ம உறுப்பை துண்டித்து கொடூர கொலை : கள்ளத்தொடர்பால் நேர்ந்த விபரீதம்!

கள்ளத்காதலால் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கரூரில் நிகழ்ந்துள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை மகாதானபுரத்தை சேர்ந்தவர் தர்மதுரை. இவரின் மனைவிக்கும் லாலாபேட்டை சந்தை மேல் பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் தர்மதுரை மற்றும் அவரது மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் தர்மதுரை மனைவி தனது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் தனது வாழ்க்கையை சீரழிக்கும் கதிர்வேலை கொலை செய்ய தர்மதுரை திட்டமிட்டுள்ளார்.

கழுத்தறுத்து, மர்ம உறுப்பை துண்டித்து கொடூர கொலை : கள்ளத்தொடர்பால் நேர்ந்த விபரீதம்!

இந்நிலையில் தர்மதுரையும் அவரது நண்பரான கிருஷ்ணன் இருவரும் சேர்ந்து கதிர்வேலை கொல்ல முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து கதிர்வேல் வீட்டுக்கு சென்ற தர்மதுரையும் அவரது நண்பர் கிருஷ்ணனும் அவரை தனியாக பேச வேண்டும் என்று அழைத்து சென்றுள்ளனர். பிள்ளப்பாளையம் வாய்க்கால் அருகே கதிர்வேலை வெட்டிக்கொலை செய்த அவர்கள், கழுத்தை அறுத்து, மர்ம உறுப்பை துண்டித்து வீசியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் கதிர்வேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தர்மதுரையையும், அவரது நண்பரான கிருஷ்ணனையும் போலீசார் கைது செய்தனர்.

கழுத்தறுத்து, மர்ம உறுப்பை துண்டித்து கொடூர கொலை : கள்ளத்தொடர்பால் நேர்ந்த விபரீதம்!

கொல்லப்பட்ட கதிர்வேலுக்கு ஏற்கனவே திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், 10 மாத பெண் குழந்தையும் உள்ளது கவனிக்கத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.