காதல் கணவருடன் மோதல் ; ஜிம் மாஸ்டருடன் பழக்கம் : காப்பகத்தில் நிர்கதியாக நிற்கும் இளம்பெண்!

 

காதல் கணவருடன் மோதல்  ; ஜிம் மாஸ்டருடன் பழக்கம் : காப்பகத்தில் நிர்கதியாக நிற்கும் இளம்பெண்!

காதல் கணவரை பிரிந்த பெண் காப்பகத்தில் தங்கி இருப்பதாக உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மதுரை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரும் அதே பகுதியை சேர்ந்த கனிமொழி(21) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்த ராஜேஷ் மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

காதல் கணவருடன் மோதல்  ; ஜிம் மாஸ்டருடன் பழக்கம் : காப்பகத்தில் நிர்கதியாக நிற்கும் இளம்பெண்!

திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் தம்பதி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் கனிமொழி கருப்பையில் நீர்க்கட்டி உள்ளதாகவும், உடற்பயிற்சி மூலம் அதை கரைக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் கனிமொழியை அவரது கணவராக மதுரை வில்லாபுரத்தில் உள்ள யோகேஷ் கண்ணா என்பவர் நடத்தும் ஜிம்மில் சேர்த்துவிட்டுள்ளார். இதையடுத்து யோகேஷ் கண்ணா உடன் கனிமொழி நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து யோகேஷ் கண்ணா உதவியுடன் கனிமொழி காப்பகத்தில் தங்கியுள்ளார். இதனிடையே தனது காதல் மனைவி ஜிம் மாஸ்டர் உடன் ஓடிவிட்டதாக பெருங்குடி காவல் நிலையத்தில் கணவர் ராஜேஷ் புகார் தெரிவித்துள்ளார்.

காதல் கணவருடன் மோதல்  ; ஜிம் மாஸ்டருடன் பழக்கம் : காப்பகத்தில் நிர்கதியாக நிற்கும் இளம்பெண்!

இந்நிலையில் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கனிமொழி, கணவன் தன்னை தொடர்ந்து குடித்து விட்டு அடிப்பதாகவும், தனது மீது அவதூறு பரப்புவதாகவும் கூறியுள்ளார். கணவரின் பேச்சை நம்பி நடத்தையில் சந்தேகித்து தனது தாய் வீட்டிலும் தன்னை ஏற்க மறுப்பதாக தெரிவித்துள்ள கனிமொழி, யாருமில்லாதவர்கள் போல் விடுதியில் தங்கி இருப்பதாக கண்ணீர் மல்க வீடியோவில் கூறியுள்ளது.