“பதவியை ராஜினாமா செய்ய தயார்” – அமித் ஷா பரபரப்பு பேச்சு… அதிர்ச்சியில் தொண்டர்கள்!

 

“பதவியை ராஜினாமா செய்ய தயார்” – அமித் ஷா பரபரப்பு பேச்சு… அதிர்ச்சியில் தொண்டர்கள்!

மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்றது. இதை விட அங்கு பெரிதும் பேசுபொருளானது மத்திய பாதுகாப்புப் படையினர் திருணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த நால்வரை சுட்டுப் படுகொலை செய்த விவகாரம் தான். இது ஆளும் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பதவியை ராஜினாமா செய்ய தயார்” – அமித் ஷா பரபரப்பு பேச்சு… அதிர்ச்சியில் தொண்டர்கள்!

இந்தச் செய்தியை அறிந்த மம்தா, “மத்திய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த 4 பேரின் உயிரிழப்புக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பதில் அளிக்க வேண்டும். இதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும். மக்களின் ஆதரவை இழந்துவிட்டோம் என பாஜகவுக்குத் தெரிந்துவிட்டதால், மக்களைக் கொல்லும் சதியில் ஈடுபடுகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சரின் சதியின் ஒருபகுதிதான் இது” என்று ஆவேசமாகப் பேசினார்.

“பதவியை ராஜினாமா செய்ய தயார்” – அமித் ஷா பரபரப்பு பேச்சு… அதிர்ச்சியில் தொண்டர்கள்!

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசியுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, “துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மேற்கு வங்க மக்கள் என்னை பதவி விலக சொன்னால், நான் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். அதை மம்தா சொல்லி நான் விலக மாட்டேன். சட்டப்பேரவை தேர்தலில் திருணாமுல் கட்சி தோல்வியடையும். மே 2ஆம் தேதி அவர் மம்தா பதவி விலகுவார்” என்றார்.