புதிய ஸ்டூடியோவில் பாடல் ஒலிப்பதிவு செய்யும் இளையராஜா

 

புதிய ஸ்டூடியோவில் பாடல் ஒலிப்பதிவு செய்யும் இளையராஜா

பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்திற்கு பிறகு இசையமைப்பு பணிக்காக இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ இன்று திறக்கப்படுகிறது.

சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு இசையமைப்பு பணியினை செய்து வந்தார் இளையராஜா. ஆனால் திடீரென பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினர் இளையராஜாவை காலி செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னை வெளியேற்றியதற்காக 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா தனது மனுவில் கூறினார். அத்துடன் ஸ்டூடியோவில் உள்ள பொருட்களை எடுக்கவும் அனுமதி அளிக்க அறிவுறுத்துமாறும் கூறினார்.

புதிய ஸ்டூடியோவில் பாடல் ஒலிப்பதிவு செய்யும் இளையராஜா

இந்த வழக்கு விசாரணையில் இளையராஜா, தங்கள் மீது தொடுத்துள்ள வழக்குகளை திரும்ப பெற்றால் அவர் பொருட்களை எடுக்க அனுமதி அளிக்கப்பதாக பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் தெரிவித்தனர். அதற்கு இளையராஜா ஒப்புதல் அளித்த நிலையில், அவர் இருந்த பிரசாத் ஸ்டூடியோ கட்டிடம் இடிக்கப்பட்டு அவர் பொருட்கள் குப்பை போல் போடப்பட்டதாக புகார் எழுந்தது.

புதிய ஸ்டூடியோவில் பாடல் ஒலிப்பதிவு செய்யும் இளையராஜா

இந்நிலையில் சென்னையில் புதிய ஸ்டுடியோவில் தனது முதல் பாடலை ஒளிப்பதிவு செய்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கான பாடலை இளையராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.கோடம்பாக்கத்தில் உள்ள பழைய எம்.எம். தியேட்டரில் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ இன்று திறக்கப்படுகிறது. வடபழனி பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றப்பட்டதால் புதிய ஸ்டுடியோவை உருவாக்கியுள்ள இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோவில் தான் பல ஆண்டுகளாக தனது படத்திற்கான இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.