“மனஉளைச்சலில் இளையராஜா” : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!

 

“மனஉளைச்சலில் இளையராஜா” : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!

இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“மனஉளைச்சலில் இளையராஜா” : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!

கடந்த 40 ஆண்டுகால இசைப்பயணத்தை பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து இளையராஜாவை காலி செய்ய செய்ய அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது பொருட்களை எடுக்க அனுமதி வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் இருவரும் ஒன்றாக பேசி முடிவெடுக்க நீதிமன்றம் அறிவித்த நிலையில் நிபந்தனைகளுடன் இளையராஜாவுக்கு அனுமதி வழங்கப்படும் என பிரசாத் ஸ்டூடியோ அறிவித்தது.

“மனஉளைச்சலில் இளையராஜா” : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!

இதை தொடர்ந்து நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்ட இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்றார். இதை தொடர்ந்து இன்று பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று இளையராஜா தனது பொருட்களை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

“மனஉளைச்சலில் இளையராஜா” : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இளையராஜாவின் செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். நீதிமன்ற அனுமதியுடன் பிரசாத் ஸ்டூடியோவிற்கு இன்று செல்ல இருந்தார் இளையராஜா. ஆனால் அவரின் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததால் அவர் மன உளைச்சலில் உள்ளதாகவும், பூட்டு உடைக்கப்பட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இளையராஜா முடிவெடுப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.