சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி!

 

சசிகலாவை தொடர்ந்து  இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி!

பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சசிகலாவை தொடர்ந்து  இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி!

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாகிறார். இந்த சூழலில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தததில், சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சசிகலாவை தொடர்ந்து  இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி!

சசிகலாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் சிறையில் உள்ள உறவினர் இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் சசிகலா கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.