சிறையிலுள்ள இளவரசிக்கும் உடல்நலக்குறைவு!

 

சிறையிலுள்ள இளவரசிக்கும் உடல்நலக்குறைவு!

கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் நன்னடத்தை விதிகளை மீறிய சசிகலா, தனது பண பலத்தை பயன்படுத்தி சிறையிலிருந்து வெளியில் ஷாப்பிங் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. அதேசமயம் அதற்கான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி கூடுதல் பரபரப்பை கிளப்பியது. இப்படி பல சர்ச்சைகளுக்கு சொந்தகாரராக வலம்வந்த சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வரும் 27 ஆம் தேதி விடுதலை ஆகவுள்ளார்.

சிறையிலுள்ள இளவரசிக்கும் உடல்நலக்குறைவு!

இந்நிலையில் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சசிகலாவுக்கு, அங்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதனிடையே சிறையில் உள்ள இளவரசிக்கும் கடந்த 5 நாட்களாக காய்ச்சல் என கூறப்படுகிறது. ஆனால் உரிய சிகிச்சை அளிக்காமல் சிறைத்துறையினர் காலதாமதம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவருக்கும் பரிசோதனை செய்தால் கொரோனா இருப்பது உறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.