நாளை காலை 9 மணிக்கு பிரசாத் ஸ்டூடியோ செல்கிறார் இசைஞானி இளையராஜா!

 

நாளை காலை 9 மணிக்கு பிரசாத் ஸ்டூடியோ செல்கிறார் இசைஞானி இளையராஜா!

பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த 40 ஆண்டுகளாக தனது இசை பணியை மேற்கொண்டு வந்த இளையராஜா அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று பிரசாத் ஸ்டூடியோ கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளையராஜா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அத்துடன் தன்னுடைய பொருட்களை எடுக்க பிரசாத் ஸ்டூடியோ அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தர்.

நாளை காலை 9 மணிக்கு பிரசாத் ஸ்டூடியோ செல்கிறார் இசைஞானி இளையராஜா!

இந்த விவகாரத்தில் தங்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெறவேண்டும், பிரசாத் ஸ்டூடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோரக் கூடாது போன்ற நிபந்தனைகள் விதிகளுக்கு உட்பட்டால் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் நுழைய இசையமைப்பாளர் இளையராஜவை அனுமதிக்க தயார் என்று அந்நிறுவனம் அறிவித்தது. அதன்படி இளையராஜா வழக்குகளை வாபஸ் பெற்றதால், இளையராஜா, நிலத்தில் உரிமை கோர மாட்டேன் என்றும் அறிவித்தார். இதனையடுத்து ஸ்டூடியோவுக்குள் செல்ல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தனது வழக்கறிர்களுடன் நாளை காலை 9 மணிக்கு பிரசாத் ஸ்டூடியோ செல்கிறார் இசைஞானி இளையராஜா. கிட்டதட்ட ஒரு ஆண்டுக்கு பின் இளையராஜா, தனது இசை வாசம் செய்யும் பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்லவிருக்கிறார்.