திருவண்ணாமலையில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம்!

 

திருவண்ணாமலையில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இசை அமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் பெற்றார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீப தரிசனம் இன்று நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று அதிகாலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. 3,500 கிலோ நெய் மற்றும் 1,000 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. கொரோனா காரணமாக முதல் முறையாக பக்தர்களின்றி மகா தீபம் ஏற்றபட்டது.

திருவண்ணாமலையில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருகார்த்திகையையொட்டி நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் இசை அமைப்பாளர் இளையராஜா மற்றும் தொழில் அதிபர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.