சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு- உதவி பேராசிரியர் ராஜினாமா

 

சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு- உதவி பேராசிரியர் ராஜினாமா

சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு இருப்பதாக குற்றம்சாட்டி விபின் என்ற உதவி பேராசிரியர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆண் பெண் பேதமின்றி சாதிய பாகுபாட்டை கடைபிடிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு- உதவி பேராசிரியர் ராஜினாமா

சாதி ரீதியான பாகுபாட்டினை  சுட்டிக்காட்டி உதவிப்பேராசிரியர் விபின் புதியதாத் என்பவர்  சென்னை ஐஐடியில் இருந்து வெளியேறுவதாக ஐஐடி நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். சென்னை ஐஐடியில் நிலவும் சாதி ரீதியான பாகுபாடு குறித்து தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி நல ஆணைய உறுப்பினர்களை உள்ளடக்கிய விசாரணை அமைப்பை ஏற்படுத்தவும் உதவிப்பேராசிரியர் விபின் புதியதாத் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி யில் இஸ்லாமிய மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஐ.ஐ.டியில்  ஜாதி, மத பாகுபாடு இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஜாதிய ரீதியிலான புகார் எழுந்துள்ளது. விபின் மானுடவியல் மற்றும் சமூகவியல் துறையிப் உதவிப்பேராசியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடதக்கது.