இந்த 3 பொருட்களை வைத்து மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் கொழிக்கும்!!

 

இந்த 3 பொருட்களை வைத்து மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் கொழிக்கும்!!

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் செல்வ கடாட்ஷம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கு நீங்கள் எப்போதும் நல்ல விஷயத்தையே பேச வேண்டும். நம்மை சுற்றி எப்போதுமே நல்ல தேவதைகளும், தேவர்களும் ததாஸ்து என்ற வார்த்தையை சொல்லி கொண்டிருப்பார்கள் என்பது நம்பிக்கை. இதனால் நாம் எதிர்மறையான விஷயங்களை பேசும் போது, அதுவே பலிக்குமாம். அதனால் காலை, மாலை என எப்போதும் உங்கள் வீட்டில் நல்லவற்றையே பேசுங்கள், நல்லதையே சிந்தியுங்கள்.

இந்த 3 பொருட்களை வைத்து மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் கொழிக்கும்!!

உங்கள் வீட்டில் வறுமை நீங்கி ,வருமானம் அதிகரிக்க வேண்டும். வீட்டில் உள்ள தடை நீங்க வேண்டும் என எண்ணுபவர்கள் பின்வரும் பரிகாரத்தை 48 நாட்கள் செய்யுங்கள். உங்கள் பூஜை அறையை தினமும் சுத்தம் செய்வது மிகவும் அவசியம். தினம்தோறும் மகாலட்சுமி படத்திற்கு புதிய மாலை சூட்டி, பூக்களால் அலங்கரித்து நெய் தீபம் ஏற்றி, ஒரு தட்டில் குண்டு மஞ்சள் 3, பச்சை கற்பூரம் சிறிய துண்டு, ஏலக்காய் 3 என இந்த மூன்று பொருட்களையும் வைத்து கொள்ளுங்கள். இந்த பொருட்களால் உங்கள் பூஜை அறை மணம் வீசுவதுடன் உங்கள் மனதிலும் அமைதி நிலவும்.

இந்த 3 பொருட்களை வைத்து மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் கொழிக்கும்!!

ஒரு விரிப்பின் மீது அமர்ந்து மகாலட்சுமியை மனமுருக வேண்டி வாருங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ள பணப்பிரச்சனை, கடன் பிரச்சனை அனைத்தும் 48 நாட்களுக்கு சரியாகி விடும் என்பது ஐதீகம், தினந்தோறும் பூஜை முடிந்தவுடன் அந்த சிறிய தட்டில் உள்ள மூன்று பொருட்களை திறந்தபடியே மகாலட்சுமியின் புகைப்படமோ அல்லது சிலைக்கு கீழோ வைத்து விடுங்கள். 48 நாட்களுக்கு இந்த மஞ்சள், ஏலக்காய், பச்சை கற்பூரத்தை மாற்றாதீர்கள். பச்சைக் கற்பூரம் மட்டும் காய்ந்து போய்விடும்.

இந்த 3 பொருட்களை வைத்து மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் கொழிக்கும்!!

அப்படி அது கரைந்து விட்டால் மட்டும் மீண்டும் புதிய கற்பூரத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் 48 நாள்கள் பரிகார பூஜை முடிந்தவுடன் மஞ்சளை உங்கள் வீட்டுப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம். ஏலக்காயை உங்கள் வீட்டில் உள்ள செடி, கொடிகளில் போட்டுவிடுங்கள். நம்பிக்கையோடு த செய்பவர்களுக்கு நிச்சயம் வாழ்க்கையில் வளம் கிடைக்கும்.