“உன் பொண்ண புருஷன் கூட அனுப்பினா நீ பொணமாயிடுவே”-தந்தையை மிரட்டும் மகளின் கள்ளக்காதலன்..

 

“உன் பொண்ண புருஷன் கூட அனுப்பினா நீ பொணமாயிடுவே”-தந்தையை மிரட்டும் மகளின் கள்ளக்காதலன்..

அடிக்கடி அம்மா வீட்டுக்கு வந்த மனைவிக்கு பக்கத்து வீட்டு வாலிபனோடு ஏற்பட்ட கள்ள காதலால் கணவன் கலங்கி நிற்க ,அவரின் தந்தையோ மகளின் கள்ள காதலனால் உயிருக்கு பயந்து வாழ்கிறார் .

“உன் பொண்ண புருஷன் கூட அனுப்பினா நீ பொணமாயிடுவே”-தந்தையை மிரட்டும் மகளின் கள்ளக்காதலன்..
அஹமதாபாத் குபேர நகரில் வசிக்கும் 24 வயது மோனாவுக்கும் ,அனிஷ் என்ற வாலிபருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்னாள் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் .இந்நிலையில் மோனா அடிக்கடி தன்னுடைய தந்தை வீட்டுக்கு வருவார் .அப்போது அவர்களின் பக்கத்து வீட்டிலிருக்கும் சிண்டு என்ற வாலிபரிடம் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது .இதனால் கணவன் அனிஷை விட்டுவிட்டு காதலனை பார்க்க அடிக்கடி அம்மா வீட்டுக்கு வர ஆரம்பித்தார் .

“உன் பொண்ண புருஷன் கூட அனுப்பினா நீ பொணமாயிடுவே”-தந்தையை மிரட்டும் மகளின் கள்ளக்காதலன்..
இதனால் கணவன் அனிஷ் அவரை அழைத்துக்கொண்டு போக சென்ற வாரம் மோனா வீட்டுக்கு வந்தார் .அப்போது மோனாவையும் குழந்தையையும் அழைத்து சென்ற போது திடீரென மோனா கணவனை விட்டு விட்டு கள்ள காதலன் சிண்டுவோடு காணாமல் போனார் .இதனால் பதட்டமடைந்த கணவர் அவரின் தந்தைக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார் .

“உன் பொண்ண புருஷன் கூட அனுப்பினா நீ பொணமாயிடுவே”-தந்தையை மிரட்டும் மகளின் கள்ளக்காதலன்..
இதனால் மோனாவின் தந்தை கள்ளகாதலனின் தாயாரிடம் தங்கள் மகனை கண்டிக்க சொல்லி கேட்டுள்ளார் .இதனால் கோபமடைந்த சிண்டு மறுநாள் மோனாவுடன் அவரின் வீட்டிற்கு வந்து இனி அவரின் மகளை கணவர் வீட்டிற்கு அனுப்பினால் உங்கள் குடும்பத்தையே கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துவிட்டு போனார் .இதனால் பயந்த மோனாவின் தந்தை மகளின் கள்ளக்காதலன் மீது போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.