“சசிகலாவை சந்தித்தால்”… வைகைச்செல்வன் எச்சரிக்கை!

 

“சசிகலாவை சந்தித்தால்”… வைகைச்செல்வன் எச்சரிக்கை!

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகியுள்ள சசிகலா நாளை தமிழகம் வருகிறார். இந்த சூழலில் நேற்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி, சசிகலா வருகை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

“சசிகலாவை சந்தித்தால்”… வைகைச்செல்வன் எச்சரிக்கை!

இதை தொடர்ந்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், அதிமுகவின் சாதனைகளை தொண்டர்கள் பட்டித்தொட்டியெங்கும் கொண்டுசேர்த்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உழைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

“சசிகலாவை சந்தித்தால்”… வைகைச்செல்வன் எச்சரிக்கை!

இந்நிலையில் அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், தமிழகம் வரும் சசிகலாவை யார் சந்தித்தாலும், அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.