மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால்.. சரவணா ஸ்டோர்ஸ் நகை மோசடியில் கடுமையாக சாடிய பாஜக

 

மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால்.. சரவணா ஸ்டோர்ஸ் நகை மோசடியில்  கடுமையாக சாடிய பாஜக

போலி தங்க நகைகளை கொடுத்து பெண் டாக்டரை இரண்டு முறை ஏமாற்றி இருக்கிறது சரவணா ஸ்டோர்ஸ் எலைட் தங்கமாளிகை என்று சென்னை மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி நிலவி இருக்கிறது.

மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால்.. சரவணா ஸ்டோர்ஸ் நகை மோசடியில்  கடுமையாக சாடிய பாஜக

சென்னை அய்யப்பன்தாங்கல் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த திருவேணி சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி அன்று மாம்பலம் காவல் நிலையத்தில் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் தங்க நகை மாளிகை மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2015ஆம் ஆண்டு தி. நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் தங்க நகை மாளிகையில் 24 கிராம் தங்க வளையல் மற்றும் 2016ஆம் ஆண்டு 23 1.60 630 கிராம் தங்க செயின் வாங்கினேன்.

2016 ஆம் ஆண்டு வாங்கிய தங்கச்செயின் ஆனது கடந்த 2019 ஆம் தேதி அறுந்து விழுந்தது. இந்த செயினை எடுத்து பார்த்தபோது அதில் வெள்ளி கம்பிகள் இருந்தது. இது குறித்து சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகையிடம் சென்று முறையிட்ட போது நகை செய்யும்போது தெரியாமல் நடந்திருக்கலாம் என்று கூறி மன்னிப்பு கேட்டார்கள். புது செயின் மாற்றி கொடுத்தனர்.

மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால்.. சரவணா ஸ்டோர்ஸ் நகை மோசடியில்  கடுமையாக சாடிய பாஜக

இந்நிலையில் 2015ஆம் ஆண்டு வாங்கிய வளையல் சமீபத்தில் உடைந்து போனது. அப்போது அதை சோதனை செய்து பார்த்தபோது கற்களுக்கு கீழே அதிக அளவில் அரக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இரண்டு வகைகளிலும் சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை ஏமாற்றி இருப்பது தெரியவந்து இருக்கிறது. அதனால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், டாக்டர் திரிவேணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாக்டர் திருவேணியிடம் இரண்டுமுறை போலியான தங்க நகைகளை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாம்பழம் பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவின்படி மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் டாக்டர் திரிவேணியிடம் சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை இரண்டு முறை ஏமாற்றி போலி நகைகளை கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்தது . இதை எடுத்து சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை மீது மோசடி செய்தல், நம்பிக்கை மோசடி ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால்.. சரவணா ஸ்டோர்ஸ் நகை மோசடியில்  கடுமையாக சாடிய பாஜக

பிரபல நகைக் கடையான தி. நகர் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை இப்படி ஒரு மோசடி செயல் நடந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது. எங்களை ஏமாற்றியது போல் பல வாடிக்கையாளர்களை போலியான தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றி இருக்கலாம் என்று டாக்டர் திரிவேணி சொல்லியிருப்பதும் சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளர்களை அதிர வைத்திருக்கிறது.

இது குறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ‘’மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால், இது ஒரு தொடர் கதை. இதற்கில்லை முடிவுரை’’என்று தெரிவித்திருக்கிறார்.