சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் உதவியில் படிக்க வேண்டுமா? இதோ அதற்கான வழி…

 

சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் உதவியில் படிக்க வேண்டுமா? இதோ அதற்கான வழி…

சமுதாயத்தின் பின்தங்கியுள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சார்ந்த மாணவ மாணவியர்களுக்குத் தரமான கல்வியை அளிப்பதை நோக்கமாக வைத்தே அகரம் தொடங்கப்பட்டது. கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அகரம் அறக்கட்டளையின் நிறுவனர் நடிகர் சூர்யா.  பொருளாதார மற்றும் சமூகக் காரணங்களால் உயர்கல்வி பெற முடியாத சூழலில் இருக்கும் மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கான ஊக்கத்தொகையும், உதவித்தொகையையும் அகரம் பவுண்டேஷன் அளித்துவருகிறது. அகரம் கடந்த 10 ஆண்டுகளில் 3,000 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா வழி நடத்தும் அகரம் ஃபவுண்டேஷன் பள்ளி /கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் தற்போது விநியோகிக்கப்பட்டுவருகிறது. தேவையுள்ள மாணவர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பம் பூர்த்தி செய்து வரும் 15.09.2020 அன்றுக்குள் அகரம் பவுண்டேஷன் முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும். இதன்மூலம் கல்விக்கான உதவித்தொகையை அகரம் ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பெற file:///C:/Users/Toptamilnews/Downloads/surya%20agaram%20foundation%20form.pdf