பைக் சாவியை மறைத்து வையுங்கள் : ராமதாஸ் கொடுக்கும் ஐடியா!

 

பைக் சாவியை மறைத்து வையுங்கள் : ராமதாஸ் கொடுக்கும் ஐடியா!

கொரோனா தொற்று இருந்தால் வெளியில் சுற்றி அதை பரப்பாதீர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பைக் சாவியை மறைத்து வையுங்கள் : ராமதாஸ் கொடுக்கும் ஐடியா!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் இன்று முதல் தேநீர் கடைகள் , நடைபாதையில் இயங்கி வந்த காய்கறி, பழங்கள், இறைச்சி கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ” முழு ஊரடங்கு என்றால் வீட்டை விட்டு வெளியில் வராதே என்பது தான் அர்த்தம். மகிழுந்து, இரு சக்கர ஊர்திகளின் சாவிகளை பெற்றோரிடம் கொடுத்து மறைத்து வைக்கச் சொல்லுங்கள்.

ஊரடங்கின் பொருளை இன்னும் புரிந்து கொள்ளாமல் ஊர் சுற்றி வருவோருக்கான அறிவுரை இது!வெளியே சுற்றாமல் வீட்டில் முடங்கியிருப்பதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து நீங்கள் உங்களையும், குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தொற்று இருந்தால் வெளியில் சுற்றி அதை பரப்பாததன் மூலம் மற்றவர்களைக் காப்பாற்றுங்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.