“அது மட்டும் நடந்திருச்சுனா சென்னையே மூழ்கும் பாருங்க” – அடித்து சொல்லும் சீமான்

 

“அது மட்டும் நடந்திருச்சுனா சென்னையே மூழ்கும் பாருங்க” – அடித்து சொல்லும் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். பின்னர் அந்த முடிவிலிருந்து மாறியதால் அவரிடம் ஏன் திருவொற்றியூரை தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

“அது மட்டும் நடந்திருச்சுனா சென்னையே மூழ்கும் பாருங்க” – அடித்து சொல்லும் சீமான்

அதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், “திருவொற்றியூரில் போட்டியிடுவதற்கு காரணம் இருக்கிறது. பொன்னேரியில் இருக்கும் காட்டுப்பள்ளியில் அதானி கட்டப்போகும் புதிய துறைமுகத்தின் நீட்சி எண்ணூர் வரை வருகிறது. எண்ணூர் பகுதி திருவொற்றியூர் தொகுதியில் இருக்கிறது. அந்த அதானியோடு சண்டை போடணும்; அந்தத் துறைமுகத்தைத் துரத்தணும். நின்னு சண்டை போட்டு துரத்தணும்ங்கிறதுக்காகத் தான் திருவொற்றியூரில் போட்டியிடுகிறேன்” என்றார்.

“அது மட்டும் நடந்திருச்சுனா சென்னையே மூழ்கும் பாருங்க” – அடித்து சொல்லும் சீமான்

தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சீமான் இதுதொடர்பாக விரிவாகப் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “சென்னையில் வெள்ளம் ஏற்படும்போது, கொசஸ்தலை ஆறு, பழவேற்காட்டில் உள்ள முகத்துவாரத்தில் வெள்ள நீர் சென்று கலக்கிறது. இப்படியிருக்கும்போது எண்ணூர் துறைமுகத்தை விரிவாக்கம் செய்தால் இப்பகுதிகளில் மட்டும் பாதிப்பு ஏற்படாது. எண்ணூர் துறைமுக விரிவாக்கம் செய்தால் தலைநகர் சென்னையே மூழ்கும்’’ என்றார்.