ஆக்சிஜன், ரெம்டெசிவரை பதுக்கி, விற்றால் குண்டாஸ் : ஸ்டாலின் அதிரடி!

 

ஆக்சிஜன், ரெம்டெசிவரை பதுக்கி, விற்றால் குண்டாஸ் : ஸ்டாலின் அதிரடி!

ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஆக்சிஜன், ரெம்டெசிவரை பதுக்கி, விற்றால் குண்டாஸ் : ஸ்டாலின் அதிரடி!

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எளிய மக்கள் கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பை தாண்டி அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஊரடங்கு என்னும் கசப்பு மருந்தை விழுங்கி மக்களின் உயிரைக் காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். அதே நேரத்தில் சில சமூக விரோதிகள் சிலர் மருந்துகளை பதுக்கி, கள்ள சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அதுபோலவே ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் வருகின்றனர். பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிக கடுமையான குற்றமாகும்.

ஆக்சிஜன், ரெம்டெசிவரை பதுக்கி, விற்றால் குண்டாஸ் : ஸ்டாலின் அதிரடி!

தடுப்பூசி இறக்குமதி ரெம்டெசிவர் மருந்து விநியோகம் உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாட்டு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தொய்வின்றி தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீது அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வரும் நிலையில் அதற்கு மாறாக ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்குவோர் மீது ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.