அனுமதி பெறாமல் திருமணங்கள் நடத்தினால், திருமண மண்டபத்திற்கு சீல் : சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

 

அனுமதி பெறாமல் திருமணங்கள் நடத்தினால், திருமண மண்டபத்திற்கு சீல் : சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் மண்டபங்களில் திருமணங்கள் நடத்தினால், திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள் ,விருந்து அரங்கங்கள், சமூக நலக் கூடங்கள் மற்றும் கோயில்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அனுமதி பெறாமல் திருமணங்கள் நடத்தினால், திருமண மண்டபத்திற்கு சீல் : சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

*திருமண சுப நிகழ்ச்சிகள் போன்ற விவரங்களைச் சென்னை மாநகராட்சியின் https://bit.ly/3iMkk7W என்ற இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

*50 நபர்களுக்கு மிகாமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்

*நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்

*நுழைவுவாயிலில் கிருமிநாசினி திரவம் வைத்து அனைவரின் கைகளையும் சுத்தம் செய்து உள்ளே அனுமதிக்க வேண்டும்

அனுமதி பெறாமல் திருமணங்கள் நடத்தினால், திருமண மண்டபத்திற்கு சீல் : சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

*நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் அமர வேண்டும்

*மாநகராட்சியின் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும் விவரங்களை கொண்டு வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்வார்கள்.

*கள ஆய்வின் போது நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை எனில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.